சர்வதேச கூட்டுக் கடற்படை பயிற்சி ஒத்திவைப்பு

இதனிடையே மார்ச் 18 முதல் 28 வரை விசாகப்பட்டிணத்தில் இந்தியக் கடற்படை சார்பில் நடத்தப்படவிருந்த சர்வதேச கடற்படை ஒத்திகையான மிலன்2020 (MILAN 2020) நிகழ்வும் கொரோனா நோய்ப் பரவலை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பங்கேற்பவர்களின் பாதுகாப்பு கருதியும், பயணத் தடைகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இந்திய கடற்படையை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.