பீதி அடையவேண்டாம்: பிரதமர் வேண்டுகோள்

இதனிடையே இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று குறித்து பீதியடையவேண்டாம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். "பீதியடையத் தேவையில்லை. நாம் சேர்ந்து செயல்படவும், தற்காப்புக்கான சிறிய ஆனால் முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டும்" என்று அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.